![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
அறத்துப்பால் | ||
புதல்வரைப் பெறுதல் | ||
61.![]() ![]() | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. |
|
62.![]() ![]() | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். |
|
63.![]() ![]() | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். |
|
64.![]() ![]() | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். |
|
65.![]() ![]() | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. |
|
66.![]() ![]() | குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். |
|
67.![]() ![]() | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். |
|
68.![]() ![]() | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
|
69.![]() ![]() | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
|
70.![]() ![]() | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |