![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
அறத்துப்பால் | ||
புகழ் | ||
231.![]() ![]() | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. |
|
232.![]() ![]() | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். |
|
233.![]() ![]() | ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். |
|
234.![]() ![]() | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. |
|
235.![]() ![]() | நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. |
|
236.![]() ![]() | தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. |
|
237.![]() ![]() | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். |
|
238.![]() ![]() | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். |
|
239.![]() ![]() | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். |
|
240.![]() ![]() | வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |