![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
அறத்துப்பால் | ||
அறன்வலியுறுத்தல் | ||
31.![]() ![]() | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. |
|
32.![]() ![]() | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. |
|
33.![]() ![]() | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். |
|
34.![]() ![]() | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. |
|
35.![]() ![]() | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். |
|
36.![]() ![]() | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. |
|
37.![]() ![]() | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
|
38.![]() ![]() | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். |
|
39.![]() ![]() | அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. |
|
40.![]() ![]() | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |