![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
அறத்துப்பால் | ||
பயனில சொல்லாமை | ||
191.![]() ![]() | பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். |
|
192.![]() ![]() | பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. |
|
193.![]() ![]() | நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. |
|
194.![]() ![]() | நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. |
|
195.![]() ![]() | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். |
|
196.![]() ![]() | பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். |
|
197.![]() ![]() | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
|
198.![]() ![]() | அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். |
|
199.![]() ![]() | பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். |
|
200.![]() ![]() | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |